இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
தைதிருநாள் வாழ்த்துக்கள் ......... உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் .. உழுதவன் கரங்களுக்கு கணையாழி அணிவிக்கும் தை திருநாளை வரவேற்ப்போம் உணவு தரும் பூமி தாயை வணங்கி உன்னதமான இத்தினத்தை .. தமிழனாகிய நாம் உணர்வோடு தை திருநாளை கொண்டாடி மகிழ்வோம் .... அனைவருக்கும் எனது இனிய தமிழ் திருநாள் வாழ்த்துக்கள் ... பணிவுடன் .... இசக்கிராஜன் ....
படம்
கால் நூற்றண்டு சாதனை நாயகர்களுக்கு பாராட்டுவிழா ............. தென்காசி: கால் நூற்றாண்டு காலம் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு தென்காசி பத்திரிக்கையாளர் சங்கம் பாராட்டு விழா நடத்தி கெளரவப்படுத்தியது. தென்காசி, செங்கோட்டை வட்டாரத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தென்காசியில் செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் சார்பில் 25ஆண்டுகள் பத்திரிக்கை துறையில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மூத்த பத்திரிக்கையாளர்கள் சண்முகம், கனியத்தா, முரளி ஆகிய மூன்று பேருக்கும் பத்திரிக்கையாளர்கள் சார்பில் பாராட்டும்,பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியி்ல பேசிய பத்திரிக்கையாளர்கள், இன்று போல அன்று எந்த வசதியும் இல்லை. ஆனால் இன்றைய பத்திரிக்கையாளர்கள் எல்லா வசதிகள் இருந்தும் அவசரப்பட்டு தவறான செய்திகளைத் தந்து விடும் நிலை உள்ளது. இதைத் தவிர்த்து தவறான செய்திகளைத் தராமல் கவனமுடன் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். விழாவில் பத்திரிக்கையாளர்கள் கணேசன், முத்துசாமி, மைதீன், இசக்கிராஜன், ஆதி, பிரகாஷ், ஜீவா, கண்ணன், முத்தையா, குமரன், ஆறுமுக நைனார், மாரிமுத்து,