இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் அங்கு குவிந்து வருகிறார்கள். விரதம்இருந்து இருமுடி கட்டு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்  சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் அரவணை, அப்பம் போன்றவை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வழங்க வேண்டும் என கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சபரிமலையில் தரமற்ற அரிசியில் செய்யப்ப்ட அப்பம் மற்றும் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சபரிமலை, பம்பை பகுதிகளில் சோதனை நடத்தினார்கள். அங்குள்ள உணவு விடுதி, கடைகளில் கடந்த 3 நாட்களாக இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையின் போது தரமற்ற அரிசியில் தயார் செய்யப்பட்ட 1 லட்சம்அப்பம் பாக்கெட்டு்கள் கண்ட
படம்
செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான அகல பாதை அமைக்கும் பணி 2010ம ஆண்டு துவங்கி பல்வேறு கட்டங்களாக பிரி்க்கப்பட்டு வேலை நடைபெற்று வருகின்றன. 120க்கும் மேற்பட்ட சிறிய பாலங்களும், 5க்கும் மேற்பட்ட பெரிய பாலங்களின் வேலைகளும நடைபெற்று வருகின்றன. சுமார் 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 பகுதிகளில் மலை குகைகள் உள்ளன. கேரள பகுதியில் 4 சிறிய குகைகளும், தமிழக பகுதியில் 1 பெரியகுகையும் உள்ளது. இவற்றில் கடின பாறைகள் கொண்ட 3குகைகளை அகலப்படுத்தும் பணி நிறைவுபெற்று விட்டது. 5வது குகையை அகலப்படுத்தும் பணி ஓரிரு வாரங்களில் தொடங்கி விடும் என்று இதன் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். ரூபாய் 355 கோடி செலவில் நடைபெற்று வரும் இப்பணியில் இரும்பு பாதை, மலைக்குகைகளை அகல்படுத்துதல், சமதளத்தை விரிவுப்படுத்துதல் என பிரிக்கப்பட்டுள்ளன. சுமார் 12 கோடி ரூபாய் செலவில் 5 குகைகளையும் அகலப்படுத்தும்பணி தற்போது விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.தமிழக எல்லையில் அமைந்துள்ள குகையின் முன்பக்கம் செயற்கைகுகை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 1000 மீட்டர் நீளம்கொண்ட இந்த குகையே இப்பகுதியில் அமைந்துள்ள குகையில் மிக நீள குகையாகும். இதன் முகப்பு
படம்
செங்கோட்டை-புனலூர் இடையே நடைபெறும் அகல ரயில் பாதை பணிகளுக்காக பழமையான 13 தூண் பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு குழுசார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. தென்னக ரயில்வேயில் இயற்கை எழில் நிறைந்த ரயில் பாதைகளில் செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை பிரதானமானது. சிறியதும், நீ்ண்டதுமான குகைகள், ராட்சத உயரம் கொண்ட பாலங்கள் ஆகியவைஇந்த வழித்தடத்தில் உள்ளன. தற்போது கொல்லம் முதல் புனலுர் வரையிலான ரயில் பாதை மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணி முடிவடைந்து விட்ட நிலபையில் புனலூர் முதல் செங்கோட்டை வரை அகல பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதில் கழுதுருட்டிக்கும், தென்மலைக்கும் இடையில் கொல்லம்-திருமங்கலம் தேசியநெடுஞ்சாலைக்கு இணையாக அமைந்துள்ள 13 தூண் வளைவுகளை கொண்டு 108 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உயரமான ரயில்வே பாலம் அந்த பகுதிக்குவரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துவருகிறது. 100 ஆண்டுகள்கடந்த பாலம்என்பதாலும், இதனை புரதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மீட்டர் கேஜ் பாதையை அகல  ரயில் பாதையாக மாற்றும் பணியின் ஒரு பகுதியாக 13 கண் பாலத்