சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகிவிட்டது..............


சென்னையில் நடந்த, 5வது தூண் அமைப்பின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு புத்தகமான, மக்களாகிய நாம் வெளியீடு சென்னையில் நடந்தது. இதில் சகாயம் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். தேமுதிக எம்.எல்.ஏ. மாபோ பாண்டியராஜன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் தமிழகத்தை உலுக்கியுள்ள கிரானைட் கொள்ளையை அம்லப்படுத்தி அரசுக்கு அறிக்கை அளித்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் பேசியதாவது...
நமது தேசம் எப்படிப்பட்ட தேசமாக இருந்தது. இன்று லஞ்சமும், ஊழலும் எங்கும் வியாபித்து உள்ளன. நாட்டின் முன்னேற்றத்திற்கு அவை பெரும் தடைகளாக இருக்கின்றன. ஏழைகளிடம் இரக்கம் காட்டலாம். ஆனால், தவறு செய்தவர்கள் மீது இரக்கம் காட்டவே கூடாது. தவறு செய்தவர்கள் மீது நான் கடும் நடவடிக்கை எடுத்துள்ளேன். தவறு செய்த யாரையும் விட்டுவிட மாட்டேன்.
நமது தேசம் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகிவிட்டது. மாற்றம் வந்தாக வேண்டும். அந்த மாற்றத்தை உருவாக்கக்கூடிய சக்தி மாணவ-மாணவிகளிடமும், இளைஞர்களிடமும் இருக்கிறது. லஞ்ச, ஊழலை ஒழிக்க விரும்பும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தடைகளாக இருக்கும் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கு 2-வது சுதந்திர போராட்டத்திற்கு நாம் எல்லோரும் தயாராவோம்.
இந்தியாவிலேயே சொத்துக்கணக்கை பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி நான்தான். எனது 21 ஆண்டு கால அரசு பணிக்ககாலத்தில் 19 முறை இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறேன். என்னை எத்தனை முறை இடமாற்றம் செய்தாலும் ஒருபோதும் என் நேர்மையை மாற்ற முடியாது என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
தமிழ்நாட்டை உலுக்கிய கிரானைட் கொள்ளையில் தொடர்புடையோரை பிடிக்கின்ற வேட்டை தீவிரமடைந்திருக்கிறது. இன்று அதிகாலை முதல் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் 34 இடங்களில் கிரானைட் கொள்ளை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இரண்டு வழக்குகள் பதிவு
மதுரை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக கிராணைட் குவாரிகளில் மிக அதிக அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மதுரை பிரிவு இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
இரு வழக்குகளில் சிக்கிய அரசு அதிகாரிகள்
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் என். மதிவாணன் ஐஏஎஸ், இயக்குநர், சர்க்கரைத் துறை, சென்னை (முன்னாள் மாவட்ட ஆட்சியர், மதுரை), ராஜாராம், துணை இயக்குநர், சுரங்கங்கள், நாகர்கோவில் (முன்னாள் துணை இயக்குநர், சுரங்கங்கள், மதுரை) பி, பெரியசாமி, வணிக வரி அலுவலர் (ஓய்வு), மேலூர், கணேசன், கண்காணிப்பாளர், மத்திய கலால் துறை மற்றும் பி.பழனிசாமி, மேனேஜிங் பார்ட்னர், பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் லிமிட்டெட் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பி.ஆர்.பிக்கு சாதகமாக செயல்பட்ட கதை
மேற்கண்ட அனைவரும் மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்தபோது அவர்கள் தங்கள் பதவியை பயன்படுத்தி பி,ஆர்,பி கிராணைட் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்து போலியான ஆவணங்கள் தயாரித்தும், சட்டவிரோதமாக மேற்படி குவாரிகள் செயல்படவும் ஒத்துழைத்து அதன் பேரில் ஆதாயம் அடைந்துள்ளனர், மேலும் மதிவாணன், ஐஏஎஸ் பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு உண்டான குவாரிகளில் சட்டத்திற்கு புறம்பாக குவாரிகள் தோண்டப்படவில்லை என்று உண்மைக்கு புறம்பாக அறிக்கையை தனக்கு ஆதாயம் ஏற்படும் விதத்தில் அரசிற்கு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு பலகோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்படுத்தியும், பி.ஆர்.பி. நிறுவனத்திற்கு பலகோடி ரூபாய்க்கு வருமானமும் ஏற்படுத்தியுள்ளார்.
கால்வாய், நீர்வழிப்பாதைகளை தாரைவார்த்தோர்
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், சி.காமராஜ், ஐஏஎஸ், நிர்வாக இயக்குநர், தமிழக உப்பு வாரியம் , சென்னை (முன்னாள் மாவட்ட ஆட்சியர், மதுரை), திரு.ராஜாராம், துணை இயக்குநர், சுரங்கங்கள், நாகர்கோவில் (முன்னாள் துணை இயக்குநர், சுரங்கங்கள், மதுரை), வி. சுப்பு, சிறப்பு துணை ஆட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்டம், சிவகங்கை மாவட்டம், (முன்னாள் வட்டாச்சியர், மேலூர் தாலுக்கா), ஆர். இராமச்சந்திரன், செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை, கீழ் வைகை பாசனப் பகுதி, பரமகுடி, இராமநாதபுரம் மாவட்டம் (முன்னாள் உதவி செயற் பொறியாளர், பொதுப்பணித்துறை, மேலூர் உதவி கோட்டம்- 4, பெரியார் மெயின் சேனல், மதுரை) மற்றும் தனியார் குவாரி ஆப்ரேட்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைவரும் மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்தபோது அவர்கள் தங்கள் பதவியை பயன்படுத்தி அரசிற்கு சொந்தமான கால்வாய்களிலும், நீர்வழிப் பாதைகளிலும், குவாரிகள் செயல்பட ஒத்துழைத்தும், போலியான ஆவணங்கள் தயாரித்தும், சட்டவிரோதமாக குவாரிகள் செயல்படவும் ஒத்துழைத்து அதன் பேரில் ஆதாயம் அடைந்துள்ளனர்,
கலெக்டர் காமராஜ்
மேலும் காமராஜ், முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர், அரசிற்கு சொந்தமாக கண்மாய்களிலும், குளங்களிலும் சட்டவிரோதமாக குவாரிகள் தோண்டப்படவில்லை என்று அரசிற்கு பொய்யான அறிக்கை தாக்கல் செய்துள்ளார், இதன் மூலம் அரசிற்கு பலகோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்படுத்தியும்; சட்டவிரோதமாக குவாரி நடத்துபவர்களுக்கு பலகோடி ரூபாய்க்கு வருமானமும் ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகளால் முதல்கட்டமாக மேற்படி வழக்கு சம்பந்தமாக மதுரை, சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் 34 இடங்களில்  சோதனை நடைபெறுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்