அதிகாரிகள்


சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 11 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விருதநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் உள்ளது ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் நிறுவனம். அந்த நிறுவனத்தில் 40 அறைகளில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளும், பட்டாசுகளுக்கான வெடி பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் இன்று பிற்பகலில் திடீர் என்று ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையே வெடித்து தரைமட்டமானது. அதிலிருந்து பரவிய தீ மளமளவென் அடுத்ததடுத்த அறைகளுக்கும் பரவியதில், அங்கிருந்த பட்டாசுகளும், வெடி மருந்துகளும் வெடித்துத் சிதறின.இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெரும் சத்தத்துடன் அந்த தொழிற்சாலையே வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும், ஆம்புலன்ஸ்களும் அந்த தொழிற்சாலை அருகே கூட செல்ல முடியவில்லை. அவ்வளவு சக்தியோடு பெரும் சத்ததோடு வெடிப்புகள் நடந்தன. பட்டாசு ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும் வெளியே நின்று கொண்டு தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதனர். சுமார் 20 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.




























விருதுநகர், சிவகாசி, சாத்தூரில் இருந்து வந்த 10 தீயணைப்பு வண்டிகளும் 60க்கும் மேற்பட்ட வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விபத்தில் இதுவரை 60 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்ற பலரும் படுகாயமடைந்துள்ளனர். இதில் 11 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது.காயமடைந்தவர்கள் விருதுநகர், சிவகாசி மருத்துவமனைகளிலும், பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தை நெருக்கமாக படம் எடுக்கச் சென்ற டிவியின் நிருபர்  படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த தீ விபத்தில் அந்த ஆலையின் 40 அறைகளும் வெடித்துச் சிதறி தரைமட்டமாகிவிட்டன.சிவகாசியில் நடந்த தீ விபத்துகளிலேயே இது தான் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ,அமைச்சர்கள் ஒபீ ,முனுசாமி ,ராஜேந்திரபாலாஜி ,உள்ளிட்ட குழு வினரை அனுப்பி வைத்துள்ளார் ,மேலும் நாளை முதல்வர் ஜெயலலிதா விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு வருகிறார் ,அங்கு பலியநூர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் அவர்,மருத்துவமனைகளுக்கு  சென்று காயம் அடைந்தவர்களிடம் நலம் விசாரிக்கிறார் ,முதல்வர் வருகையை யொட்டி தமிழகத்தின் முக்கிய அதிகாரிகள் குழுவினர் விருதுநகரை நோக்கி வரதொடன்கியுள்ளனர் .முதல்வர் வருகைக்குள் தொழிற்சாலை அதிபர் பால் பாண்டியை கைது செய்ய காவல் துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர், சிவகாசி வரலாற்றில் நடந்த மிக பெரிய விபத்து இதுதானம்.தொழில் சாலை அதிபரை மட்டும் கைது செய்தால் போதாது ..இந்த விபத்து நடக்காமல் இருக்க போதிய வசதிகளை ஆராயாமல் சோதனை செய்ய வேண்டிய அதிகாரிகள் கவனக்குறைவுடன் செயல் பட்டதால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக சிவகாசி மக்கள் கண்ணீருடன் கூறுகின்றனர்..முதல்வர் வருகையால் பல அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்