கொடூர குளமாக மாறிய கூடன்குளம் ...........


கூடங்குளம் கிராமத்தில் ஆங்காங்கே தீவைப்பு- கடைகள் அடைப்பு- போலீஸார் குவிப்பு

கூடங்குளம் கடற்கரைப் பகுதியில் நடந்த பெரும் கலவரத்தைத் தொடர்ந்து தற்போது கூடங்குளம் கிராமத்திலும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. கிராமம் முழுவதும் ஆங்காங்கே சிலர் தீவைப்பில் குதித்துள்ளனர். இதனால் பெரும் புகைமூட்டமாக உள்ளது. தடியடி நடத்தியவர்களைப் போலீஸார் அடித்துக் கலைத்து விரட்டினர்.
கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே சுனாமி காலனி கடற்கரைப் பகுதியில், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை போலீஸார் இன்று தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்து விரட்டினர்.
இந்த நிலையில் தற்போது கூடங்குளம் கிராமத்தில் பதட்டம் அதிகரித்துள்ளது. அங்கு கூடிய பொதுமக்கள் அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். பின்னர் ஊரைச் சுற்றிலும் ஆங்காங்கே தீவைத்தனர். இதனால் கூடங்குளத்தைச் சுற்றிலும் புகைமூட்டமாக மாறியுள்ளது.






மேலும் சாலை மறியலிலும் மக்கள் குதித்தனர். ஆனால் அவர்களைப் போலீஸார் தடியடி நடத்தி விரட்டிக் கலைத்தனர். இந்தப் பதட்டத்தைத் தொடர்ந்து கூடங்குளம் கிராமத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் தலைமையில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதட்டம் நிலவுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்