மனசை புண் படுத்தாதீர்கள் ..................



அமெரிக்காவைச் சேர்ந்த, திரைப்பட இயக்குனர், டெர்ரி ஜோன்ஸ் மற்றும் ஷாம் பேசிலி ஆகியோர் குறும்படம் எடுத்து வெளியிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, முஸ்லிம்கள் ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் திரண்ட, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர், அங்கு உருவ பொம்மை எரிப்பு, கல்வீச்சு போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போராட்டம் தொடர்பாக, 18 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என, ராயப்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.
அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருப்பதால், அங்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.









 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெயினுலாபுதீன் தலைமையில் 5,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால், தூதரகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மையை எரித்தனர். போராட்டக்காரர்களிடம் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர். மாலையில் சுன்னத் ஜமாத் அமைப்பினர், அமெரிக்க தூதரகம் முன் போராட்டம் நடத்தினர். போலீசார் எச்சரித்தும் தூதரகம் முன் நுழைய முயன்றதால், அவர்கள் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர்.செங்கோட்டையில் இந்திய தவ் ஹித் ஜமாத் அமைப்பினரும் ,கடையநல்லூரில் தமிழ்நாடு தவ் ஹித் ஜமாத் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்