அப்பா ,அம்மா ,செய்யாததை   அம்மா செய்வார் .....


அமைச்சர் செந்தூர் பாண்டியன்




 செங்கோட்டை அருகே உள்ள பைன்பொலி அரசு மேல் நிலை பள்ளியில் சட்ட மன்ற 
உறுப்பினர் மேம் பாட்டு நிதியில் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் சுத்திகரிக்க ப்பட்ட 
குடிநீர் நல்லி திறப்பு விழா அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமையில் நடை பெற்றது .
பாதுகாக்கப்பட்ட குடிநீர் நல்லியை அமைச்சர் செந்தூர் பாண்டியன் திறந்து வைத்தார் 
.பின்னர் அவர் பேசியதாவது ;தமிழகத்தில் உயர்ந்த மக்கள் மட்டுமே படிக்கும் கல்வியை
 ஏழை ,தொழிலாளி குழந்தைகளும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் நல்ல 
பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறார் .நீங்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும் 
என்பதற்காக அப்பா ,அம்மா .செய்யதததை முதல்வர் அம்மா அவர்கள் உங்களுக்காக 
சீரிய திட்டங்களை செயல் படுத்தி வருகிறார் ,மேலும் ..சட்ட மன்ற உறுப்பினர்கள் 
கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் பள்ளி மாணவ ,மாணவிகள் நலனுக்காக 
அதிக நிதிகளை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார் என்றார்.










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்