மாதா அமர்தானந்தமாயியை தாக்க முயன்ற வாலிபர் மர்ம சாவு











கொல்லம் ஆசிரமத்தில் மாதா அமர்தானந்தமாயியை தாக்க முயற்சித்த வழக்கில் கைது
செய்யப்பட்ட பீகார் வாலிபர் திருவனந்தபுரத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் மர்மமான
முறையில் பலியானார்.
கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி அருகே உள்ள வள்ளிகாவு பகுதியில் மாதா அமர்தானந்தமாயி
 ஆசிரமம் உள்ளது. கடந்த 1ம் தேதி ஆசிரமத்தில் மாதா அமர்தானந்தமாயி பக்தர்களுக்கு ஆசி
வழங்கி கொண்டு இருந்தார். இதையொட்டி  ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு
இருந்தனர். அப்போது திடீரென ஒரு வாலிபர் மாதா அமர்தானந்தமாயியை தாக்க முயன்றார்.
உடனடியாக பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஓப்படைத்தனர்.
இதனால் ஆசிரமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கருணாகப்பள்ளி போலீசார் வாலிபரிடம் விசாரணை
நடத்தியபோது அவரது பெயர் சத்னாம் சிங்மான் என்றும் பீகார் மாவட்டம் காயா மாவட்டத்தை
சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. பீகாரில் ஒருசட்ட கல்லூரியில் படித்து வந்த அவர் மனநிலை
பாதிக்கப்பட்டதால் படிப்பை நிறத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென
காணாமல் போனார். இது தொடர்பாக பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து
வாலிபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் கேரளா வந்த அவர் கொல்லம் ஆசிரமத்தில் வைத்து மாதா அமர்தானந்தமாயியை
தாக்க முயன்றபோது கைது செய்யபபட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க கருணாகப்பள்ளி
நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கொல்லம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்
கொல்லம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் திருவனந்தபுரம் போரூர் கடை மருத்துவமனையிலும்
 அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மனநல மருத்துவமனையில்
உள்ள குளியலறையில் மயக்கமடைந்த நிலையில் சத்னாம் சிங்கிடந்தார். உடனடியாக அவரை
திருவனந்தபுரம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த
டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவனந்தபுரம்
போலீசார் விசாரித்து வருகின்றனர். மாதா அமர்தானந்தமாயியை தாக்க முயனற வாலிபர்
மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்