போலீஸ்காரரின் மனைவி, குழந்தைகள் உள்பட 5 பேர் ரயில் விபத்தில்பலி ........

நெல்லூரில் ரயில் தீப்பிடித்து எரிந்ததில் நெல்லையை சேர்ந்த ஐந்து பேர் பலியாகியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் டேவிட்ராஜா.கான்பூரில் மத்திய பாதுகாப்பு படை போலீசில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் பணியாற்றிவந்தார். இவரது மனைவி பொன்மணி. அவரது சொந்த ஊர் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளையாகும்.பொன்மணி மற்றும் குழந்தைகள், குடும்பத்துடன் கான்பூரில் பணியாற்றும் டேவிட்ராஜாவை, சந்திக்க சென்றிருந்தனர். டேவிட்ராஜாவுடன் அனைவரும் நெல்லைக்கு திரும்புவதாக இருந்தது. அவருக்கு விடுமுறை கிடைக்காததால் குடும்பத்தினரை சனிக்கிழமை இரவில் கான்பூரில் ரயிலில் அனுப்பிவைத்தார். அவரது மனைவி பொன்மணி30, மகள்கள் ரோஸ்மேரி 7, ஜாஸ்மின் 4, டேவிட்ராஜாவின் தாயார் எலிசபெத் 52,மனைவியின் தம்பி தவமணி 27 ஆகியோர் ரயிலில் பயணித்தனர்.அனைவரும் எஸ் 11 பெட்டியில் பயணித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பலியாகியுள்ளனர்.இன்று காலையில் ரயில் பெட்டி எரிந்த தகவல் ஐந்தாம்கட்டளையில் உள்ள குடும்பத்தினருக்கு தெரியவந்ததும்அனைவரும் கதறி அழுதனர். பொன்மணியின் தந்தை நாராயணன் உள்ளிட்டோர் கதறி அழுதனர். அந்த கிராமமே சோகமாக காட்சியளித்தது.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்