வறுமையின் கொடுமையால்  ஒரு குடும்பமே தற்கொலை
முயற்சி பெண் பலி 



தென்காசி அருகே உள்ள நன்னகரம் பகுதியை சார்ந்தவர் தொழிலாளி சந்திரன்
இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் ,கவிதா என்ற ஏழு வயது மகளும் ,விஜய் என்ற
ஆறு வயது பையனும் ,விஸ்வா என்ற நான்கு வயது மகனும் உள்ளனர் ,இவர்கள்
குடும்பத்தில் சந்திரன் ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்வதால் அவரின் வருமானம்
குடும்பத்திற்கு போத வில்லை ........வெளியில் கடன் வாங்கி குடும்ப செலவுகளை
கழித்து வந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் ,கடனை திரும்ப கேட்டு தொல்லை
கொடுக்கவே வேதனை அடைந்த ஜெயந்தி இன்று காலை யில் பாலில் விசத்தை
கலந்து குழந்தை களுக்கும் ,கணவனுக்கும் கொடுத்து தானும் குடித்து தற்கொலை
செய்ய முயன்றனர் .இதில் ஜெயந்தி மட்டும் பரிதாபமாக உயிரிழந்தார் .கணவன்
சந்திரன் ,மற்றும் குழந்தைகள் உயிருக்கு போராடிய நிலையில் தென்காசி மாவட்ட
மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவீர சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது .
.வறுமையின் கொடுமையால்  ஒரு குடும்பமே தற்கொலை முயற்சி மேற்கொன்ண்ட
சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதிள்ளது ...
 தமிழகத்தில் இலவச அரிசி ,இலவச கல்வி ,என எது வழங்கினாலும் இது போல் துயர சம்பவம் நடப்பதை தடுக்க முடியாத அவலம் ...தொடரத்தான்  செய்கிறது ....




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்