மனமிருந்தால் உதவலாமே...மருத்துவ படிப்புக்கு.....


நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் கூலி தொழிலாளி. இவரது மகன் சுப்பையா (17). இவர் கடந்த 12ம் வகுப்பு தேர்வில் 1148 மதிப்பெண்கள் பெற்றார். இவரது மருத்துவ கட் ஆப் மார்க் 195.25. இவருக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் கல்லூரி சேர முடியாமல் தவித்து வருகிறார்.

இதையடுத்து அவரது மருத்துவ படிப்புக்கு உதவி செய்ய மாணவர் சுப்பையா படித்த களக்காடு கே.ஏ.எம்.பி. மீரானியா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொது நல சேவகர்கள் சிலர் சேர்ந்து 'சுப்பையா மருத்துவக் கல்வி குழு' அமைத்து நிதி திரட்டி வருகின்றனர்.

இதுவரை ரூ 2 லட்சத்து 75 ஆயிரம் பணம் திரட்டப்பட்டுள்ளது. இதனை அவர்கள் நாளை மாணவர் சுப்பையாவிடம் வழங்க உள்ளனர். மேலும் மாணவர் மேல் படிப்புக்கு நிதி உதவி அளிக்க விரும்புவோர் 9443582348, என்ற செல்போன் நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சுப்பையா மருத்துவக் கல்வி குழுவினர் அறிவித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்