தென்மேற்கு பருவ மழை எப்போதும் மும்பையில் துவங்கி கேரளமாநிலத்தில் ஜூன்.ஜூலை. யில் களை கட்டுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்  அரிசி விலையும் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து வருகின்றனர்.தென்மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஜூன் துவங்கி மூன்று மாதங்களுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யும். மாவட்டத்தில் உள்ளபாபநாசம் ,கடனாநதி ,கருப்பாநதி ,மணிமுத்தாறு ,அடவிநைனார்,குண்டாறு உள்ளிட்ட  11 அணைகள் நிரம்பும். ஜூன் முதல் தேதியன்று பாபநாசம் பாபநாசம் ,கடனாநதி ,கருப்பாநதி ,மணிமுத்தாறு ,அடவிநைனார்,குண்டாறு உள்ளிட்ட அணை நீர் விவசாயத்திற்கு திறக்கப்படும். கார் பருவ நெல் சாகுபடி நடக்கும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டுலட்சம் ஏக்கரில் நெல் உற்பத்தி நடக்கும். தற்போது மழை பெய்யாததால் விளைநிலங்கள் தரிசாக கிடக்கின்றன.விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், ரைஸ்மில் தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல தரப்பும் பாதிப்படைந்துள்ளனர்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்