முள்ளிவாய்க்காலில் குண்டுமழை பொழிந்தாலும் , தி.மு.க., எம்.பி.,கனிமொழி
வாழ்த்து தெரிவிப்பார்..-தா.பாண்டியன்

தூத்துக்குடி:பிரணாப் வெற்றிபெற்றார் என்பதற்காக தி.மு.க., எம்.பி.,கனிமொழி,அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை, முள்ளிவாய்க்காலில் குண்டுமழை பொழிந்தாலும், அவர்கள் வாழ்த்து தெரிவிப்பர் என இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது: இந்தியாவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படுவது வாடிக்கையாகிவிட்டது. தற்போது, பெட்ரோல் விலை பைசாவில் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில், இது ரூபாயில் உயர்த்தப்படும். அமெரிக்க டாலர் மதிப்பில் பெட்ரோல் வாங்குவதால், ரூபாயின் மதிப்பு குறைகிறது. இந்த விலைஉயர்வுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். அதற்கு, எங்கள் கட்சி துணைநிற்கும். இதற்கு காரணமான, மத்திய காங்.- தி.மு.க., கூட்டணி ஆட்சியை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். அதுவே, எங்களின் தலையாய கடமை. ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி, மக்களின் ஓட்டுக்களைப்பெற்று வெற்றிபெறவில்லை.எனவே, இத்தேர்தல் முடிவை வைத்து பார்லி., தேர்தல் முடிவை கணிக்கக்கூடாது. ஜனாதிபதி தேர்தலில் தங்கள் கட்சி ஓட்டளித்த வேட்பாளர் பிரணாப் வெற்றிபெற்றார் என்பதற்காக, தி.மு.க., எம்.பி.,கனிமொழி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை, முள்ளிவாய்க்காலில் குண்டுமழை பொழிந்தாலும், அவர்கள் வாழ்த்து தெரிவிப்பர்.இந்தியாவின் வீழ்ச்சிக்கு தி.மு.க.,தான் பொறுப்பு. இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...இன்று உலக எழுத்தறிவு தினம்...

காரியசித்தி அளிக்கும் புளியரை குரு பகவான்